கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் தலைவருக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி

மியான்மர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 29ஆம் நாள் மியான்மர் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கிற்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

மியான்மரில் நிலநடுக்கத்தால் கடும் உயிரிழப்பு மற்றும் பெரும் சேதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஷிச்சின்பிங் அதிர்ச்சி அடைந்தார். சீன அரசு மற்றம் மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தவும், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள், காயமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மியன்மாருக்கு தேவையான உதவி செய்யவும், பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் வெகுவிரைவில் பேரழிவைத் தோற்கடித்து, தாயகத்தை மீண்டும் கட்டியெழுப்பதை ஆதரிக்கவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, சீனத்தலைமையமைச்சர் லீ சியாங்கும், மின் ஆங் ஹ்லைங்கிற்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author