அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Estimated read time 0 min read

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்த நிலையில் அங்குள்ள அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், உள்ளிட்டவற்றை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ய மறுத்ததால் அங்கு கடும் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்த்தத்தில் ஈரான் கையழுத்திட வேண்டுமெனவும் அவ்வாறு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author