சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட காவலர் – பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!

Estimated read time 0 min read

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே சாலை விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த சங்கர்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த நிலையில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் வாகன விபத்தில் சிக்கிய ரமேஷ் என்பவரை மீட்க சென்றுள்ளார்.

படுகாயமடைந்த ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து காவலர் சங்கர்குமார் உயிரிழந்தார். இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்த ரமேஷும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author