ஷி ச்சின்பிங்-புத்தின் தொலைபேசி மூலம் தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 19ஆம் நாள் மாலை, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர்கள் மத்திய கிழக்கு நிலைமை குறித்து கருத்துகளைப் பரிமாறி கொண்டனர்.

புத்தின் கூறுகையில்,

ஈரானின் அணு ஆற்றல் வசதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிக ஆபத்தானது. மேலும் தீவிரமாகும் நிலைமை எந்த தரப்புகளின் நலன்களுக்குப் பொருத்தமற்றது. ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். சீனாவுடன் இணைந்து நெருக்கமான தொடர்பு மேற்கொண்டு, இந்நிலைமையைத் தணிவுப்படுத்துவதற்கும் பிரதேச அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காப்பதற்கும் பாடுபட ரஷியா விரும்புகின்றது என்றார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

தற்போதைய மத்திய கிழக்கு நிலைமை மோசமானது. கொந்தளிப்பான நிலைமையில் உலகம் நுழைந்துள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இந்த மோதல் மேலும் தீவிரமாகினால், இந்த இரு நாடுகளைத் தவிர்த்து, இப்பிரதேசத்திலுள்ள இதர நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், நான் 4 முன்மொழிவுகளை முன்மொழிவதாக தெரிவித்தார்

முதலில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இரண்டாவது, பொது மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும். மூன்றாவது, பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். நான்காவது, சர்வதேச சமூகம் கூட்டாக பாடுபட வேண்டும் என்றார்.

தொடர்புடைய தரப்புகளுடன் தொடர்பு மேற்கொண்டு, மத்திய கிழக்கு பிரதேசத்தின் அமைதியை மீட்க பாடுபட சீனா விரும்புகின்றது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author