நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வருவாய், சமூக நலன், உயர்கல்வி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பணியிலிருந்து திரும்பிய ராஜேந்திர ரத்னு, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், இப்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், எஸ். விஜயகுமார் நில சீர்திருத்த ஆணையராகவும், வள்ளலார் சமூக சீர்திருத்தத் துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்கிறார்.
ஒரே நேரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி
