தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார். அதன்படி வரும் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரும் ஏப்.6, வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதி, வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஏப்.9ம் தேதி, வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கவிஞர் திருமலை சோமு – வாக்காளர் விழிப்புணர்வு பாடல் வெளியீடு
https://youtu.be/9udqMu4YhrE?si=JC2ZB2y0ZcAsI-OK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கவிஞர் திருமலை சோமு ஒரு சிறப்பு பாடலை உருவாக்கியுள்ளார். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு குடிமகனும் தமது வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலின் வரிகளை கவிஞர் திருமலை சோமு எழுதியுள்ளதுடன், அதற்கு ஏற்ற இசை மற்றும் காணொளி உருவாக்கம் அனைத்தும் நவீன ஏ.ஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இப்பாடல் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களையும் தேர்தலில் கட்டாயம் பங்கேற்று வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இந்த வாக்காளர் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த முயற்சி, தொழில்நுட்பமும் சமூக பொறுப்பும் ஒன்றிணையும் புதிய படியாகப் பாராட்டப்படுகிறது.
