நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 500 சிறிய ட்ரோன்களை அனுப்பியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்தாத ட்ரோன்களே.
L70, ZU-23, ஷில்கா மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவமும், விமானப்படையும் வெற்றிகரமாக முறியடித்தன.
ஆயுதம் ஏந்தாத ட்ரோன்களை அனுப்புவதற்குப் பின்னால் உள்ள நோக்கம், பொதுமக்களிடையே பீதியை பரப்புவதும், இராணுவ நிறுவல்கள் குறித்து உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதும் என்று சந்தேகிக்கப்படுகிறது.