தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நல்லதிட்ட உதவிகளை வழங்குகிறார்.
கள ஆய்வு மேற்கொள்ள 9 ம் தேதி காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுகிறார்.
மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லூர் முதலமைச்சர் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரயில்நிலையம் ரவுடான அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்சியில் கலந்துகொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கு நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
9 ஆம் தேதி இரவு திருவாரூரில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 10 ஆம் தேதி காலை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.