ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து.
இந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறி, லாவா குழம்பு வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக எரிமலைக்கு அருகே உள்ள கிரிண்டவிக் நகரிலிருந்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதுடன், சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு முதல் 12வது முறையாக வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.