ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பம் ஆறு நூற்றாண்டுகளில் முதல் முறையாக க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்ததால் ஒரு அரிய புவியியல் நிகழ்வை சந்தித்துள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த வெடிப்பு இந்த வார தொடக்கத்தில் அதே பகுதியைத் தாக்கிய 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இந்த நிலநடுக்கம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரவலான சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.
கம்சட்கா எரிமலை வெடிப்பை கண்காணித்து வரும் குழுவின் தலைவரான ஓல்கா கிரினா, 1463 ஆம் ஆண்டு எரிமலை ஓட்டம் குறிப்பிடப்பட்டதிலிருந்து வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட முதல் க்ராஷென்னினிகோவ் வெடிப்பு இது என்பதை உறுதிப்படுத்தினார்.
நிலநடுக்கத்தின் தாக்கம்; 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்ய எரிமலை
