வெற்றிகரமாக ஏற்றப்பட்ட 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபச்சுடர்

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தீபச்சுடர் ஜுன் 15ஆம் நாள் வியாழக்கிழமை சீனாவின் ஹாங் ட்சோ நகரில் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியானது வரும் செப்டம்பர் 23ஆம் நாள் முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை ஹாங் ட்சோ நகரில் நடைபெறவுள்ளது.

நடப்பு விளையாட்டு போட்டி தொடக்கத்துக்கு, இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வரை, 56 போட்டி அரங்குகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான செயல்திறன் சோதனைகள் முடிக்கப்பட்டு, போட்டிக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.  

Please follow and like us:

You May Also Like

More From Author