பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று தொலைபேசியில் உரையாடினர்.
அப்போது, உலக அமைதி மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “என் நண்பர் அதிபர் மேக்ரானுடன் ஒரு சிறந்த உரையாடல் நடந்தது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.” என்று தெரிவித்தார்.
இந்த உரையாடல், தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்த இரு தலைவர்களின் கவலையை வெளிப்படுத்தியது.
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உலக அமைதி குறித்து பேச்சுவார்த்தை
