சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் அதிகபட்சமாக மாத இறுதியில் ரூ.76 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று(செப். 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,270-க்கும், சவரன் ₹82,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று(செப்.16) சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று சரிவைக் கண்டுள்ளது.