9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Estimated read time 1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பின்வரும் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது.

அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
சேலம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author