இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு $6.92 பில்லியன் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், கையிருப்பின் முக்கிய அங்கமாக இருக்கும் அந்நியச் செலாவணி சொத்துக்கள் (Foreign Currency Assets) குறைந்ததே ஆகும்.
அக்டோபர் 31 அன்று முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்துக்களின் மதிப்பு $1.9 பில்லியன் குறைந்து $564.59 பில்லியனாக உள்ளது.
இதில் யூரோ, பவுண்டு மற்றும் யென் போன்ற அமெரிக்க அல்லாத அலகுகளின் மதிப்பு மாறுபாட்டின் விளைவுகளும் அடங்கும்.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு
