தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Estimated read time 0 min read

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை தொடரலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழக்கினை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author