செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பூமியின் பழமையான உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு  

Estimated read time 1 min read

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இயந்திர கற்றல் (Machine Learning) முறையைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் பூமியில் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினங்களின் இரசாயன தடயங்களை சுமார் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சாதனை, நமது பூமி அதன் தற்போதைய வயதில் கால் பங்கு மட்டுமே இருந்தபோது நுண்ணுயிர் வாழ்க்கை இருந்ததற்கான ஆதாரத்தை வழங்குகிறது.
வாஷிங்டனில் உள்ள கார்னகி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் ஹேசன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, சிதைந்த மூலக்கூறுகளில் உள்ள உயிரியல் தோற்றம் கொண்ட கரிம மூலக்கூறுகளுக்கும், உயிரற்ற தோற்றம் கொண்ட கரிம மூலக்கூறுகளுக்கும் இடையே 90% துல்லியத்துடன் வேறுபடுத்தி அறியும் ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளது.

You May Also Like

More From Author