நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் 19 அமர்வுகள் இடம்பெற உள்ளன. கூட்டத் தொடரில் நெடுஞ்சாலை திருத்த சட்டம், சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, குற்ற வழக்குகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதனிடையே எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
