டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி: ISIS பயங்கரவாதிகள் 2 பேர் கைது  

Estimated read time 1 min read

தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ISIS அமைப்பை சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம் பெரிய பயங்கரவாத தாக்குதல் சதியை முறியடித்துள்ளனர்.
அட்னான் என்ற பெயருடைய இருவர் டெல்லி மற்றும் போபால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் டெல்லியின் சாதிக் நகரைச் சேர்ந்தவர்; மற்றவர் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகை செய்திருந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author