“மெடிக்கல் மிராக்கிள் 40 வருட கருவா?”.. 82 வயது பாட்டியின் வயிற்றில் அதிசயம்

Estimated read time 1 min read

மருத்துவ உலகில் சில சம்பவங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் கொலம்பியாவில் நடந்துள்ளது.

82 வயது மூதாட்டி ஒருவர் கடுமையான வயிற்று வலி என மருத்துவமனைக்குச் சென்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

காரணம், அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு ‘கல் குழந்தை’ (Stone Baby) இருந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாட்டி கருவுற்றபோது, குழந்தை கருப்பைக்கு வெளியே வளர்ந்ததால் அது அங்கேயே இறந்து, காலப்போக்கில் கல்லாக மாறியுள்ளது.

மருத்துவ மொழியில் இதனை ‘லித்தோபீடியன்’ (Lithopedion) என்று அழைக்கிறார்கள். கருப்பைக்கு வெளியே வளரும் கரு சிதைவடையும் போது, அது தாயின் உடலுக்குத் தொற்று ஏற்படுத்தாமல் இருக்க, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே அதைச் சுற்றிக் கால்சியம் படிமங்களை உருவாக்கி கல்லாக மாற்றிவிடுகிறது.

இதனால் அந்தப் பாட்டிக்கு 40 ஆண்டுகளாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருந்துள்ளது. 10,000 கர்ப்பங்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் இந்த அரிய நிகழ்வு, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியில் அறுவை சிகிச்சை மூலம் அந்த 4 பவுண்டு எடையுள்ள ‘கல் குழந்தை’ அகற்றப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author