அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களுக்கு விடுமுறை…

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் உள்ள கணினி மென்பொருள் பராமரிப்பு  மற்றும் வருடாந்திர தணிக்கைப் பணிகள் (Auditing) மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, வரும் 31.12.2025 (புதன்கிழமை) மற்றும் 01.01.2026 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் பொதுமக்கள் சேவை கோரி மையங்களுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, வரும் 02.01.2026 (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து மையங்களும் வழக்கம் போல் செயல்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author