கிரீன்லாந்து விவகாரம்: ரஷ்யா, சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க டிரம்ப் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவு தொடர்பாக அமெரிக்கா விரைவில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவது அல்லது அதன் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவது குறித்த விருப்பத்தை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்று அவர் கருதுகிறார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் செயல்பாடுகள் குறித்து டிரம்ப் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“நாம் ஒன்றும் செய்யாவிட்டால், ரஷ்யாவோ அல்லது சீனாவோ கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author