திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

Estimated read time 0 min read

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உற்சாகமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் முதன்மையான மற்றும் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டி, பெரிய சூரியூர் கிராமத்தில் தை மாதம் 2 ஆம் நாள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை கிராம திடலில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைத்து தர வேண்டும் என, ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்க வைத்து துவக்கி வைத்தார்

750 ஜல்லிக்கட்டு காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் 10 சுற்றுக்களாக இந்த நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றுள்ளன

Please follow and like us:

You May Also Like

More From Author