எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
NCERT வெளியிட்ட எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம் பெற்றிருந்தது.
இது நீதித்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
