வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

Estimated read time 0 min read

கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் பசு ஓட்டமானது நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் மாட்டுப் பொங்கல் தினமான இன்று கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தொழுவத்தில் 400 க்கும் மேற்பட்ட மாடுகள் அடைக்கப்பட்ட நிலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவில் காளைகளுக்கு பூஜை செய்து அதன் பின்னர் மஞ்சு விரட்டானது நடைபெற்றது.

இதில் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பசு ஓட்டத்தில் மாரிச்சாமி என்பவரது மாடு முதல் இடத்தை பிடித்த நிலையில் அவருக்கு கோயில் மற்றும் பொதுமக்களின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author