மத்திய நிதி அமைச்சகம் தனது அலுவலகத்தை ரைசினா ஹில்லிலிருந்து (North Block) கர்த்தவ்யா பவனில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியிருந்தாலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆவணங்கள் வழக்கம் போல நார்த் பிளாக் வளாகத்திலேயே அச்சிடப்பட உள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினர் கடந்த 2025 செப்டம்பரில் புதிய அலுவலகத்திற்கு மாறினர்.
இருப்பினும், புதிய வளாகத்தில் பட்ஜெட் ஆவணங்களின் ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையிலான அதிநவீன மற்றும் பாதுகாப்பான அச்சுக்கூடம் இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
பட்ஜெட் ஆவணங்கள் கசிவதை தவிர்க்க, பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் நார்த் பிளாக் அடித்தளத்தில் உள்ள அச்சுக்கூடமே பாதுகாப்பானது எனக் கருதப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முகவரி மாறினாலும் பாரம்பரியம் மாறாது: பழைய இடத்திலேயே அச்சிடப்படும் பட்ஜெட் 2026 ஆவணங்கள்
