உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் மீது ஒரு வார காலத்திற்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற தனது வேண்டுகோளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “உக்ரைனில் தற்போது நிலவி வரும் வழக்கத்திற்கு மாறான கடும் குளிரைக் கருத்தில் கொண்டு, ஒரு வாரத்திற்குத் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு நான் தனிப்பட்ட முறையில் அதிபர் புடினிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்குச் சம்மதித்துள்ளார்,” என்றார்.
பல ஆலோசகர்கள் இந்த முயற்சி பலிக்காது என்று கூறிய போதிலும், புடின் இதற்கு இணங்கியது எதிர்பாராத மற்றும் வரவேற்கத்தக்க ஒன்று என டிரம்ப் குறிப்பிட்டார்.
உக்ரைனில் ஒரு வாரம் போர்நிறுத்தம்
