செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கோடிங் துறையில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் ‘கிளாட் ஓபஸ் 4.6’ (Claude Opus 4.6) மாடல், ஆரம்பத்திலிருந்தே ஒரு முழுமையான சி-கம்பைலரை (C compiler) உருவாக்கியுள்ளது.
இது ஒரு சாதாரண பொறியியல் சாதனை அல்ல என்று ஐடி துறையினர் வியக்கின்றனர்.
இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மென்பொருள் பொறியாளர்களின் எதிர்காலம் குறித்த தனது முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஏஐ வளர்ச்சியால் கோடிங் வேலைகளுக்கு ஆபத்தா? சோஹோ ஸ்ரீதர் வேம்புவின் முக்கிய கருத்து
