தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த வருமான வரி தொடர்பான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2015-16 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ₹15 கோடி வருமானம் தொடர்பாக, வருமான வரித் துறை விதித்த ₹1.5 கோடி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த அபராத நோட்டீஸ் சட்டப்பூர்வ கால வரம்பிற்குள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், மேற்கொண்டு நிவாரணம் பெற தீர்ப்பாயத்தை அணுக விஜய்க்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்த விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
