3,500 கிமீ தூரம் வரை பாய்ந்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி  

Estimated read time 1 min read

இந்தியா தனது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்திய ராணுவத்தின் மூலோபாயப் படைகள் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையானது, ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப அளவுகோல்களையும் துல்லியமாக எட்டியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author