மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் இரு நாடுகளுக்கிடையிலான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உலகளாவிய அமைதியற்ற சூழலில், கடல்வழி அண்டை நாடுகளான இந்தியாவும் மலேசியாவும் தங்களின் முழுத் திறனைப் பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்
