சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரை அமைச்சகம், கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம், கலை இலக்கிய சம்மேளனம் ஆகியவை இணைந்து, நாடகக் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் 3 ஆண்டுக்காலத் திட்டத்தை(2026-2028)அண்மையில் வெளியிட்டன.
நாடகக் கலை குழு வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பது, நாடகங்களை இயற்றும் தரத்தை உயர்த்துவது, நாடக்கத் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பது, நாடகக் கலைகளைப் பாதுகாப்பது முதலிய அம்சங்கள் குறித்து, இத்திட்டத்தில் விரிவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.
