வட கொரியா கடல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்துகிறது: தென்கொரியா குற்றசாட்டு  

வட கொரியா வடக்கின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
“வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையானது உயர் கோணத்தில் ஏவப்பட்ட நீண்ட தூர ஏவுகணை என நம்பப்படுகிறது” என்று கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வட கொரியா தனது ஏழாவது அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகளை முடித்திருக்கலாம் என்று தென் கொரியாவின் இராணுவ புலனாய்வு நிறுவனம் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சென்றடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நெருங்கிவிட்டதாக தென் கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author