செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் AI மாநாட்டின் ஒருபகுதியாக உயர்மட்ட தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் எட்டக் கூடியதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்க வேண்டும் எனக் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகாரத்திற்கான கருவி அல்ல; சேவைக்கான கருவி எனவும் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசி முதல் UPI பரிவர்த்தனை வரை இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி எளிய மக்களுக்கான சேவையாகவே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

AI தொழில்நுட்பம் வெளிப்படையான கண்ணாடிப் பெட்டியாக இருக்க வேண்டும் எனவும் அதன் பாதுகாப்பு விதிகள் வெளிப்படையாக இருந்தால் மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் எனவும் உலகத் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author