கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம், 100 நாட்கள் வரை சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தமாக, 161 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.
30 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், இதுவே குறைவானதாக இருக்கிறது.
2011 – 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 191 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 162 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.
இது ஒருபுறமிருக்க எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க.வினர் பங்கேற்ற விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சட்டமன்ற இறுதி நாளான, கடந்த 20ம் தேதி தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள், அரசையும், முதலமைச்சரையும் புகழ்ந்து பேசியது மட்டும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
