சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற குங்-ஃபு திருவிழாவையொட்டி மனித வடிவ ரோபோக்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ‘டெம்பிள் ஆஃப் ஹெவன்’ கலாச்சார அரங்கில், மனித உருவ ரோபோக்கள் குழுவாக இணைந்து நடத்திய தற்காப்புக் கலை நிகழ்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. இந்தக் கண்கவர் காட்சி, சீனாவின் சொந்தத் தயாரிப்பான ‘உள்நாட்டு கிளஸ்டர் கட்டுப்பாட்டு தளத்தால்’ இயக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் ஒரு விநாடி கூட பிசகாமல், மிகத் துல்லியமாகத் தற்காப்புக் கலை அசைவுகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தின பார்வையாளர்களை வியக்க வைத்தது.
இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போலவே மிக லாவகமாக குங்-ஃபு மற்றும் இதர தற்காப்புக் கலை முறைகளைச் செய்து காட்டின. 2026-ஆம் ஆண்டில் சீனா தனது ரோபோட்டிக்ஸ் துறையில் அடைந்துள்ள அபார வளர்ச்சியை இந்த நிகழ்ச்சி பறைசாற்றுகிறது. வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, எதிர்காலத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தொழில்துறையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது.
