அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் அந்த நாட்டு ராணுவத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
இல்லையெனில், நீங்கள் அனைவரும் மரணத்தைச் சந்திக்க நேரிடும்” என்று அவர் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்பை அழிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆயுதங்களைக் கீழே போடுங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்; ஈரான் ராணுவத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை
