பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24, 2026) நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
,
இந்தத் திடீர் வெடிவிபத்தில் மேலும் 50க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து உள்ளதால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், காவல்துறையினர் மற்றும் ராணுவப் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
