இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக துபாய் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர் அங்கேயே முகாமிட்டுள்ளார்.
சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியுள்ள சிந்து, விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பர்மிங்காம் செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்.
துபாயில் சிக்கிய பிவி சிந்து: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்
