ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான ‘பல்தேசியக் கூட்டணியில்’ இந்தியா இணைவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா ஏற்கனவே ‘ஆபரேஷன் சங்கல்ப்’ மூலம் தனது போர்க்கப்பல்களை இப்பகுதியில் நிலைநிறுத்தி, தனது சொந்தக் கொடி ஏந்திய கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது.
எனவே, வேறொரு நாட்டின் தலைமையிலான ராணுவக் கூட்டணியில் இணைந்து செயல்படுவதை விட, சுயமாகச் செயல்படுவதையே இந்தியா விரும்புகிறது.
