ஏர் இந்தியா, மார்ச் 19 முதல் மார்ச் 28, 2026 வரை 36 சர்வதேச விமான சேவைகளை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக பயண தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பயண வாய்ப்புகள் குறைவாக உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த கூடுதல் சேவைகள் டெல்லி மற்றும் மும்பையை, லண்டன், பிராங்பர்ட், சூரிச் மற்றும் டொராண்டோவுடன் இணைத்து, 10,000-க்கும் மேற்பட்ட இருக்கைகளை சேர்க்கும்.
கனடா, ஐரோப்பாவிற்கு கூடுதலாக 36 விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா
