இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், தனது நிறுவனப் பங்குகள் திட்டமிட்டு வீழ்த்தப்படுவதாக இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) புகார் அளித்துள்ளது.
2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில், தங்களது நிறுவனப் பங்குகளில் வழக்கத்திற்கு மாறான வர்த்தக முறைகள் மற்றும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாக நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக முறையான விசாரணை முடியும் வரை, தங்களது பங்குகளை ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) பிரிவில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் அதிரடி: பங்குச் சந்தை முறைகேடு குறித்து செபியிடம் புகார்
