பெங்களூரு கட்டுமான விபத்து: கட்டிட உரிமையாளர் கைது  

பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
கடந்த வாரம் முதல் பெங்களுரு நகரத்தில் பெய்து வரும் கனமழையால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து 13 மீட்கப்பட்ட நிலையில், தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த முயற்சிகளில் இரண்டு தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மீட்பு வேன்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் முனிராஜு ரெட்டியை, அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

You May Also Like

More From Author