மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனைத் தணிக்கவும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்யவும், ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, சர்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
