மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.
மார்ச் 29 முதல் அக்டோபர் 31 வரை அமலுக்கு வரும் புதிய அட்டவணையில், கடந்த ஆண்டை விட வாரத்திற்குச் சுமார் 3,000 விமானங்கள் குறைவாகவே இயக்கப்படும்.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் வாரத்திற்கு 25,610 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 22,600 ஆகக் குறையவுள்ளது. இது சுமார் 12 சதவீத வீழ்ச்சியாகும்.
கோடைகால விமான அட்டவணையில் 12% விமான சேவைகள் குறைப்பு
