தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Estimated read time 1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கவுள்ளது.

வேட்புமனுக்களை ஏப்ரல் 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், ஏப்ரல் 7ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் பொதுப்பிரிவினர் வைப்புத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயும், SC-ST-யினர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

மார்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்பதால், அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author