இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் ஈரான் நடத்திய தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
வளைகுடா நாடுகளில் உள்ள எரிவாயு கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் நிரந்தரமாக சேதமடைந்துள்ளனவா அல்லது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளனவா என்பதில் நிலவும் தெளிவற்ற சூழல், இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
சமையல் சிலிண்டர் விலையில் அதிர்ச்சி! எல்பிஜி தட்டுப்பாடு குறைய 4 வருஷம் ஆகுமா?
