அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிகக்கடுமையான எச்சரிக்கை உலக நாடுகளைப் பதற்றத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ஏப்ரல் 22-ஆம் தேதி நள்ளிரவுடன் இந்த ஒப்பந்தம் காலாவதியாக உள்ள சூழலில், ஈரானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இறுதி வாய்ப்பை டிரம்ப் வழங்கியுள்ளார்.
CNBC ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஈரானுடனான தற்போதைய சூழலை அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு வரலாற்றுத் திருப்பமாக டிரம்ப் வர்ணித்துள்ளார்.
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அதிரடி கெடு! போர் மேகங்கள் சூழ்கிறதா?
