டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சூரிச் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் A330 விமானம், ரன்வேயில் சென்றுகொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சிக்கிய ஆறு பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் பதற்றம்: சுவிஸ் ஏர் விமான என்ஜினில் தீ
Estimated read time
1 min read
