பிரபல மென்பொருள் நிறுவனமான சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களுக்கு எழுதியுள்ள ஒரு பகிரங்க கடிதம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் இந்தியர்கள் மீதான பார்வை மாறி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களைத் தாய்நாட்டிற்கு திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு கருத்துக்களையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னாட்சிக்கு இது போன்ற முன்னெடுப்புகள் அவசியம் எனப் பலர் வரவேற்றுள்ளனர்.
அதே நேரம், இந்தியாவில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படாமல், திறமையாளர்களைத் திரும்புமாறு கோருவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனச் சிலர் பதிவிட்டுள்ளனர்.
‘அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்’: Zoho ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி கடிதம்
